கொஞ்சம் பழைய பாட்டுதான் போலருக்கே? இப்பதான் கண்ணுல பட்டுது.
ஏ.ஆர்.ரஹ்மான், பின்னிருக்காரு. Boys படப் பாடல்களின் ஸ்டைலில் ஒரு ஹிந்திப் பாட்டு.
pappu cant dance sala!
ஆட்டம் தான் சரியில்லை. ஆனா, பாட்டு ஜூப்பர்.
Tuesday, December 2, 2008
Pappu cant dance sala - கலக்கல் ஏ.ஆர்.ரஹ்மான்
Posted by
SurveySan
at
10:43 PM
1 comments
Labels: pappu cant dance sala
Friday, October 24, 2008
உன் கண்ணில் நீர் வழிந்தால்... நேயர் விருப்பம்
வணக்கம். ரொம்ப நாளா தூங்க விட்டாச்சு, இந்த நேயர் விருப்பம் பக்கத்தை.
போன பதிவுல கேட்ட, 'உனக்கென இருப்பேன்..' பாட்டை யாரும் பாடி அனுப்பலை. நான் பாட முயற்சி பண்ணா, உயிர் போர மாதிரி தொண்டை வலிக்குது, கண்ண கட்டுது.
பிரமாதமான அந்த சங்கதி நிறைந்த பாட்டை பாடும்,வித்வான்கள் நம்ம மத்தியில் யாரும் இல்லாம போனது சோகம். :(
எல்லா நேயர் விருப்பத்துக்கும், பொங்கி எழும், டாக்டரும் இதுல கைய விரிச்சிட்டாரு.
சரின்னு, அடுத்த பாட்டை எடுத்துக்கிட்டு கோதால எறங்கிட்டேன்.
சினிமா தொடர் பதிவு போடும்போது, 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டை பத்தி சொல்லியிருந்தேன். அப்பலருந்து, இந்த பாட்டு, உள்ள எக்கோ ஆகிட்டே இருந்துச்சு.
எவ்வளவு நாள்தான், உள்ள இருக்கர டி.எம்.எஸ்'ஸை அடக்கரது?
அதான், அவுத்து வுட்டுட்டேன்.
இனி, உங்க பாடு, டி.எம்.எஸ் பாடு.
கேட்டுட்டு, உயிர் பிழைச்சீங்கன்னா, வேர யாராச்சும், இத்த பாடி அனுப்புங்க.
லிரிக்ஸ் கீழ இருக்கு.
disclaimer: பாட்டை கேட்க ஆரம்பிக்கும் முன், வால்யூமை கொறச்சு வச்சுக்கங்க.
கொடுக்கல் வாங்கல் பாக்கி இருந்தா, முடிச்சுட்டு வந்து பாட்ட கேளுங்க. என்ன வேணா நடக்கலாம். நான் பொறுப்புலேது.
(if you cant see the widget and if you still want to hear the song, you can click here :))
|
VSK sings:
|
தமிழ் பிரியன் sings.
வரிகள்:
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய்
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
ஒரிஜினல் இங்கே:
Posted by
SurveySan
at
6:09 PM
23
comments
Wednesday, October 1, 2008
காந்தி - கடவுள் என்பது...
Posted by
SurveySan
at
10:30 PM
1 comments
Labels: gandhi 'god is' speech and text
Tuesday, April 1, 2008
பதிவர்களின் 'நச்' கதைகள் திரைப்படங்களாய்...
இந்த வருஷம் நல்ல படியா அமையும்னு யாரோ சொன்னது ஞாபகம் வருது.
நேத்துதான், இந்த நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாத்திலயும் நம்பிக்கையில்லன்னு ஒரு பதிவ போட்டிருந்தேன்.
ஆனா, இப்ப என் கண்ணையே நம்ப முடியல.
ரவிராஜ் என்ற பதிவர், ப்ரபல டைரக்டர் கிருஷ்ணராஜிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 'நச்' கதைப் போட்டியில் இடம்பெற்ற இரண்டு கதைகள் இவரை வெகுவாகக் கவர, அதற்கு மேலும் முலாம் பூசி, ஒரு திரைக்கதையை அமைத்திருந்தாராம்.
நேற்றைய முன்தினம் நடந்த ஒரு திரைப் பட விழாவில், ப்ரபல இந்தித் தயாரிப்பாளர், ராஜ் யஷ்ஷிடம், இந்த இரு திரைக்கதையைப் பற்றியும் விவரித்தாராம்.
கதையில் இருந்த திடீர் திருப்பங்கள், யஷ்ஷை வெகுவாகக் கவர, ரவிராஜிடம் அந்த கதைக்கான உரிமையை உடனே பெறும் படியும், தன்னை அடுத்த மாதம் மும்பையில் வந்து சந்திக்குமாறும் கூறியூள்ளாராம்.
ரவிராஜ் நேற்று என்னை அழைத்து அந்த இரு கதைகளூக்கும் தலா 50,000 ரூ, முன்பணமாகத் தரட்டுமா என்று கேட்டார்.
யாரோ எழுதிய கதைக்கு நான் எப்படி பணத்தைப் பெறுவது என்ற குழப்பம் எனக்கு.
அந்த இரு கதைகளின் உடமஸ்தர்களும், என்னைப் போல் 'முகமூடிப்' பதிவர்கள்.
மடல் அனுப்பியும், அவர்களிடமிருந்து பதிலில்லை.
இன்னும்ம் இரு தினங்களுக்குள் பதிலில்லை என்றால், முழுப் பணத்தையும் (ரூ.75,000 தலா) என் பெயரில் பெற்று, பகுதியை நன்கொடையாகவும், மீதிப் பாதியை நானும் வைத்துக் கொள்ளலாமென்று முடிவு.
ஒரு பக்கம், நம் கதைகள் திரைப்படங்களாவது மகிழ்ச்சி தந்தாலும், இந்த முகமூடி வாழ்க்கையால், உரிய அங்கீகாரம் கிட்டாமல் போகும் பதிவர்களை எண்ணி வருத்தமே மிகுகிறது :((
;)
Posted by
SurveySan
at
10:02 PM
12
comments
Labels: சர்வேசன்